தந்தை பெரியார் வரலாறு - 3ன் தொடர்ச்சி...
இருபதாம் நூற்றாண்டின் தமிழக அரசியல் வரலாற்றில் நட்பு எனும் அத்தியாயத்தை எழுதப்போனால், உலகின் தலைசிறந்த நாவல்களும் தோற்றுப்போகும்! கோப் பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு போல, பெரியார் ராஜாஜியின் நட்பும் ஆழமானது!
அன்று, சேலம் நகர மன்றத் தலைவராக இருந்த ராஜ கோபாலாச்சாரியார் என்றழைக்கப்பட்ட ராஜாஜி, ஈரோடு வந்து ராமசாமியாரைச் சந்தித்தது ஆரம்பம். தொடர் சந்திப்புகளில், காங்கிரஸில் சேருமாறு அழைப்பு விடுத்தார் ராஜாஜி. ராமசாமியாரும் அதனை ஏற்றுக்கொண்டு காங்கிரஸில் சேர்ந்து தமிழக அரசியலில் அடியெடுத்துவைத்தார். தமிழ்நாட்டில் அப்போது நிலவிவந்த அரசியல் சூழ்நிலையைத் தெரிந்துகொண்டால்தான், ராமசாமியாரின் அரசியல் வருகை யில் உள்ள முக்கியத்துவத்தை நம்மால் முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியும்.
1914 உலக வரலாற்றில் பல மாறுதல்களை ஏற்படுத்திய ஆண்டு. முதல் உலகப் போர், ரஷ்யாவில் லெனின் தலைமையில் சோஷலி சத்தின் எழுச்சி, தென் ஆப்பிரிக் காவிலிருந்து காந்தியின் இந்திய வருகை எனப் பல முக்கிய நிகழ் வுகள் அந்த ஆண்டில்தான் நிகழ்ந் தன. தமிழ்நாட்டிலும் அதிசயிக்கத் தக்க சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. படித்த இளைஞர்கள் சிலர் அந்த ஆண்டு சென்னை, திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளி யில் கூடி விவாதித்தனர். அவர் களது பேச்சில் உணர்ச்சியும் உஷ் ணமும் அதிகம் இருந்தன. அவர் களின் கோபத்துக்குக் காரணம், அன்றைய பிரிட்டிஷ் ஆட்சிமட்டு மல்ல; அதன் அரசாங்கப் பதவி களும்கூட!
சப் கலெக்டர், ஜட்ஜ், தாசில் தார், வக்கீல், ரெவென்யூ இன்ஸ் பெக்டர் போன்ற உயர் பதவிகள் பலவற்றில் பிராமண சமூகத்தினரே பரவலாக ஆதிக்கம் செலுத்தி வந்தனர். டெபுடிகலெக் டர்கள், சப் ஜட்ஜுகள், மாவட்ட முன்சீப்கள் என அரசாங்கத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் அவர் களே அதிக எண்ணிக்கையில் பதவியில் இருந்தனர். மற்ற சாதி களில் இருந்த படித்த இளைஞர் கள் அரசாங்கப் பதவிகளுக்கு வருவதற்கு இது பெரும் தடையாக இருந்தது. இதுதான், அன்றுகூடிப் பேசிய இளைஞர்களின் விவாதத் தின் சாராம்சம். விளைவு, 1916 நவம்பர் 20ல், சென்னை பூந்த மல்லி நெடுஞ்சாலையில் வக்கீல் எத்திராஜ் என்பவர் வீட்டில் டாக்டர் நடேசன், சர்.பி.டி.தியா கராயர், டி.எம்.நாயர், பனகல் அரசர் போன்றோர் தலைமையில் சுமார் 30 பேர் ஒன்று கூடினர். புதிய இயக்கம் ஒன்று உதயமானது. 'தென்னிந்திய உரிமை நலச் சங்கம்' என்ற பெயரில் அன்று உருவான அந்த இயக்கம், தனது அடுத்தடுத்த மாநாடுகளால் தென்னிந்தியா முழுக்கப் பெரும் எழுச்சியையும் அலையையும் மக்கள் மத்தியில் உண்டாக்கி யது. அவர்கள் தங்களைத் 'திரா விடர்' என அடையாளப்படுத்திக் கொண்டனர்.
அரசாங்கப் பதவிகளில் பிராமணர் அல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் வகுப்புவாரி முறையில் பிரநிதித்துவம் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மாநாடுகள் தோறும் முழங்கினர். இதையட்டி தங்களது கருத்துக்களை மக்களிடத்தில் கொண்டுசெல்லும்விதமாகப் பத்திரிகைகளையும் துவக்கினர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் அவை மக்களிடையே பரபரப்பாக விற்பனையாகி, கட்சிக்குப் புதிய அந்தஸ்தையும் கௌரவத்தையும் ஏற்படுத்தின. அவர்கள் நடத்திய 'ஜஸ்டிஸ்' எனும் ஆங்கிலப் பத்திரிகையின் பெயரே நாளடைவில் மக்களிடையில் அதிகமாகப் புழங்கத் துவங்கி, பிற்பாடு அக்கட்சியின் பெயரையும் மக்கள் ஜஸ்டிஸ் கட்சி என்றே அழைத்தனர். இந்த 'ஜஸ்டிஸ்'தான் தமிழில் 'நீதி'யாகி பின்னர் 'நீதிக்கட்சி' என்ற பெயருடன் அரசியல் வரலாற்றில் தன் னைப்பதிந்துகொண்டது.
இந்தச் சூழலில்தான் பிரிட்டிஷ் அரசாங்கம், முதல் உலகப் போரில் தனக்கு ஒத்துழைத்த இந்தியாவுக்குத் தனது நன்றியைக் காட்டும் விதத்தில், மக்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்ளப் பயிற்சி அளிக்கும் விதமாக மாகாணங்களில் சுய ஆட்சி வழங்கத் திட்டமிட்டது.
1919ல் சென்னையில் நடந்த முதல் மாநகராட்சித் தேர்தலில் 'நீதிக் கட்சி' பெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. நீதிக் கட்சியின் தலைவரான சர்.பி.டி.தியாகராயர் சென்னை மாநகராட்சியின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்கட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் மற்றொரு பிரிவான அன்னிபெசன்ட் அம்மையார் தலைமையிலான சுயராஜ்யக் கட்சி படுதோல்வி அடைந்தது.
இத்தனைக்கும் வட நாட்டில் காட்டுத் தீயென தேச பக்தி கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு இருந்த நேரம் அது. காந்தி மகான் மக்களிடையே புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருந் தார். அங்கு காங்கிரஸ், மக்கள் போற்றும் மகத்தான கட்சியாக மாறி இருந்தது. ஆனால், தென் னாட்டில் காங்கிரசுக்கு மக்க ளிடத்தில் போதிய செல்வாக்கு இல்லை என்பதைத் தேர்தல் நிரூபித்துவிட்டது.
காந்திக்கு இந்த விஷயம் தெரிந்து, தென்னாட்டில் காங்கிரஸைப் பலப்படுத்துவது குறித்து தீவிரமாக யோசிக்கத் துவங்கினார். இது சம்பந்தமாக அப்போதைய காங்கிரஸ் பேரியக்கத்தின் தென்னாட்டுத் தலைவர்களில் ஒருவரான ராஜாஜியிடம் அவர் தெளிவாக ஒரு விஷயத்தை எடுத்துரைத்தார். இனி, தென்னாட்டில் காங்கிரஸ் பேரியக்கத்தை வளர்க்க வேண்டுமானால், அதைப் பிராமணரல்லாத ஒருவரை வைத்துதான் செய்ய முடியும்; நல்ல பேச்சு வன்மையும் தேச பக்தியும்கொண்ட தலைவராக இருந்தால், நீதிக் கட்சியை முழுவதுமாக ஓரங்கட்டிவிடலாம் என்பதே அது!
இச்சமயத்தில்தான் ராஜாஜிக்கு ஈரோட்டில் ராமசாமி எனும் தலைவரின் சாகசங்களும் அருமை பெருமைகளும் தெரிய வந்தன. ராமசாமியாருக்கு காங்கிரஸ் மீது, எப்போதும் ஒரு அபிமானம் உண்டு. ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதுமே துடித்துப்போன ராமசாமியார், வ.உ.சி. உட்பட 50க்கும் மேற்பட்டவர்களை ரயிலில் அழைத்துச்சென்று அந்த இடத்தில் கண்ணீர் மல்க நின்றிருக்கிறார். தன்னைத் தேடி வரும் காங்கிரஸ் தொண்டர்களுக்குப் பொருளுதவியும் பலமுறை செய்திருக்கிறார். என்றாலும், அப்போதெல்லாம் காங்கிரஸில் அடிப்படை உறுப்பினர் பதவியைக்கூட அவர் ஏற்றிருக்கவில்லை. எனினும் ராஜாஜியின் மீது கொண்டிருந்த நட்பால், அவரது அழைப்புக்கு உடனே ஒப்புக்கொண்டார். தீண்டாமை ஒழிப்பு, மது ஒழிப்பு, விதவைத் திருமணம், கதராடை இயக்கம் என இந்த நான்கு கொள்கைகளையும் கேட்ட மாத்திரத்திலேயே ராமசாமி அவர்களுக்கு காந்தியின் மேல் அளவற்ற மதிப்பும் மரியாதையும் உண்டாகிவிட்டது.
''இனி கண நேரமும் நாம் தாமதிக்கக் கூடாது. இந்தத் தேசத்தை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க, காந்தியின் கரத்தை வலுப்படுத்த இதுவே சரியான தருணம். உங்களது நகராட்சி மன்றப் பதவியை ராஜினாமா செய்யுங்கள். நானும் சேலம் நகர மன்றத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன்'' என ராஜாஜி துரிதப்படுத்த, ராமசாமியார் முழு மனமின்றித் தயங்கினார்.
''நாயக்கரே! உங்களுக்கு என்னதயக்கம் இருந்தாலும் வெளிப்படையாகக் கேளுங்கோ!''
''இல்லை... தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் காங்கிரஸ் கட்சின்னாலே அது உங்க சாதிக்காரங்க கட்சியாதான் இருக்குது.''
''அதனாலதான் உங்களைக் கூப்பிடறேன். நீங்க வந்து அந்த அவப் பேரை மாத்திடுங்கோ!''
''அது போதாது! எனக்கு நீங்க ஓர் உத்தரவாதம் தரணும். கட்சி யிலேயும் உத்தியோகத்திலேயும் உங்க சாதிக்காரங்க இல்லாத மத்த சாதிக்காரங்களுக்கு 50 சதவிகிதம் நீங்க விட்டுக்கொடுத்து டணும். அதுக்குச் சம்மதம்னா சொல்லுங்க, இப்பவே காங்கிரஸ் கட்சியிலே சேர்ந்துடறேன். அதுக் கப்புறம் வெள்ளைக்காரனுக்கு பூட்ஸ் துடைக்கிற ஜஸ்டிஸ்கார னுங்களை உண்டு இல்லைன்னு பண்ணிப்புடலாம்!''
ராஜாஜி தயங்கவும், ''யோசிக்கிறீங்க பாத்தீங்களா! உங்களால அது முடியாது!'' என்றார் ராமசாமி.
''அதில்லை நாயக்கரே! நான் மட்டும் எடுக்கிற முடிவில்லை அது. சரி, கவலையை விடுங்க. அடுத்து நடக்கப்போற திருப்பூர் மாநாட்டுல நானே இதுக்கான தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேத்துறேன். கையைக் கொடுங்கோ, இதைப் போய்ப் பெரிசா எடுத்துக்கிட்டு...'' நண் பர்கள் கைக் குலுக்கிக்கொண் டனர்.
அந்த வாக்குறுதியை நிறை வேற்றுவது அத்தனை எளிதல்ல என்பது ராஜாஜிக்கு நன்றாகத் தெரியும். அப்போதைக்கு வேறு வழி தெரியாமல் வெறுமனே ஒப் புக்குத் தலையை ஆட்டிவிட்டார். பின்னால் பிரச்னை வரும்போது எப்படியாவது பேசி நாயக்கரைச் சமாளித்துவிடலாம் என்பது ஆச்சாரியாரின் கணக்கு.
ஆனால், அது தப்புக் கணக்கு என்பது ஆறு வருடங்களுக்கு பிறகுதான் அவருக்கு உறைத்தது.
அன்று, சேலம் நகர மன்றத் தலைவராக இருந்த ராஜ கோபாலாச்சாரியார் என்றழைக்கப்பட்ட ராஜாஜி, ஈரோடு வந்து ராமசாமியாரைச் சந்தித்தது ஆரம்பம். தொடர் சந்திப்புகளில், காங்கிரஸில் சேருமாறு அழைப்பு விடுத்தார் ராஜாஜி. ராமசாமியாரும் அதனை ஏற்றுக்கொண்டு காங்கிரஸில் சேர்ந்து தமிழக அரசியலில் அடியெடுத்துவைத்தார். தமிழ்நாட்டில் அப்போது நிலவிவந்த அரசியல் சூழ்நிலையைத் தெரிந்துகொண்டால்தான், ராமசாமியாரின் அரசியல் வருகை யில் உள்ள முக்கியத்துவத்தை நம்மால் முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியும்.
1914 உலக வரலாற்றில் பல மாறுதல்களை ஏற்படுத்திய ஆண்டு. முதல் உலகப் போர், ரஷ்யாவில் லெனின் தலைமையில் சோஷலி சத்தின் எழுச்சி, தென் ஆப்பிரிக் காவிலிருந்து காந்தியின் இந்திய வருகை எனப் பல முக்கிய நிகழ் வுகள் அந்த ஆண்டில்தான் நிகழ்ந் தன. தமிழ்நாட்டிலும் அதிசயிக்கத் தக்க சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. படித்த இளைஞர்கள் சிலர் அந்த ஆண்டு சென்னை, திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளி யில் கூடி விவாதித்தனர். அவர் களது பேச்சில் உணர்ச்சியும் உஷ் ணமும் அதிகம் இருந்தன. அவர் களின் கோபத்துக்குக் காரணம், அன்றைய பிரிட்டிஷ் ஆட்சிமட்டு மல்ல; அதன் அரசாங்கப் பதவி களும்கூட!
சப் கலெக்டர், ஜட்ஜ், தாசில் தார், வக்கீல், ரெவென்யூ இன்ஸ் பெக்டர் போன்ற உயர் பதவிகள் பலவற்றில் பிராமண சமூகத்தினரே பரவலாக ஆதிக்கம் செலுத்தி வந்தனர். டெபுடிகலெக் டர்கள், சப் ஜட்ஜுகள், மாவட்ட முன்சீப்கள் என அரசாங்கத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் அவர் களே அதிக எண்ணிக்கையில் பதவியில் இருந்தனர். மற்ற சாதி களில் இருந்த படித்த இளைஞர் கள் அரசாங்கப் பதவிகளுக்கு வருவதற்கு இது பெரும் தடையாக இருந்தது. இதுதான், அன்றுகூடிப் பேசிய இளைஞர்களின் விவாதத் தின் சாராம்சம். விளைவு, 1916 நவம்பர் 20ல், சென்னை பூந்த மல்லி நெடுஞ்சாலையில் வக்கீல் எத்திராஜ் என்பவர் வீட்டில் டாக்டர் நடேசன், சர்.பி.டி.தியா கராயர், டி.எம்.நாயர், பனகல் அரசர் போன்றோர் தலைமையில் சுமார் 30 பேர் ஒன்று கூடினர். புதிய இயக்கம் ஒன்று உதயமானது. 'தென்னிந்திய உரிமை நலச் சங்கம்' என்ற பெயரில் அன்று உருவான அந்த இயக்கம், தனது அடுத்தடுத்த மாநாடுகளால் தென்னிந்தியா முழுக்கப் பெரும் எழுச்சியையும் அலையையும் மக்கள் மத்தியில் உண்டாக்கி யது. அவர்கள் தங்களைத் 'திரா விடர்' என அடையாளப்படுத்திக் கொண்டனர்.
அரசாங்கப் பதவிகளில் பிராமணர் அல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் வகுப்புவாரி முறையில் பிரநிதித்துவம் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மாநாடுகள் தோறும் முழங்கினர். இதையட்டி தங்களது கருத்துக்களை மக்களிடத்தில் கொண்டுசெல்லும்விதமாகப் பத்திரிகைகளையும் துவக்கினர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் அவை மக்களிடையே பரபரப்பாக விற்பனையாகி, கட்சிக்குப் புதிய அந்தஸ்தையும் கௌரவத்தையும் ஏற்படுத்தின. அவர்கள் நடத்திய 'ஜஸ்டிஸ்' எனும் ஆங்கிலப் பத்திரிகையின் பெயரே நாளடைவில் மக்களிடையில் அதிகமாகப் புழங்கத் துவங்கி, பிற்பாடு அக்கட்சியின் பெயரையும் மக்கள் ஜஸ்டிஸ் கட்சி என்றே அழைத்தனர். இந்த 'ஜஸ்டிஸ்'தான் தமிழில் 'நீதி'யாகி பின்னர் 'நீதிக்கட்சி' என்ற பெயருடன் அரசியல் வரலாற்றில் தன் னைப்பதிந்துகொண்டது.
இந்தச் சூழலில்தான் பிரிட்டிஷ் அரசாங்கம், முதல் உலகப் போரில் தனக்கு ஒத்துழைத்த இந்தியாவுக்குத் தனது நன்றியைக் காட்டும் விதத்தில், மக்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்ளப் பயிற்சி அளிக்கும் விதமாக மாகாணங்களில் சுய ஆட்சி வழங்கத் திட்டமிட்டது.
1919ல் சென்னையில் நடந்த முதல் மாநகராட்சித் தேர்தலில் 'நீதிக் கட்சி' பெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. நீதிக் கட்சியின் தலைவரான சர்.பி.டி.தியாகராயர் சென்னை மாநகராட்சியின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்கட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் மற்றொரு பிரிவான அன்னிபெசன்ட் அம்மையார் தலைமையிலான சுயராஜ்யக் கட்சி படுதோல்வி அடைந்தது.
இத்தனைக்கும் வட நாட்டில் காட்டுத் தீயென தேச பக்தி கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு இருந்த நேரம் அது. காந்தி மகான் மக்களிடையே புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருந் தார். அங்கு காங்கிரஸ், மக்கள் போற்றும் மகத்தான கட்சியாக மாறி இருந்தது. ஆனால், தென் னாட்டில் காங்கிரசுக்கு மக்க ளிடத்தில் போதிய செல்வாக்கு இல்லை என்பதைத் தேர்தல் நிரூபித்துவிட்டது.
காந்திக்கு இந்த விஷயம் தெரிந்து, தென்னாட்டில் காங்கிரஸைப் பலப்படுத்துவது குறித்து தீவிரமாக யோசிக்கத் துவங்கினார். இது சம்பந்தமாக அப்போதைய காங்கிரஸ் பேரியக்கத்தின் தென்னாட்டுத் தலைவர்களில் ஒருவரான ராஜாஜியிடம் அவர் தெளிவாக ஒரு விஷயத்தை எடுத்துரைத்தார். இனி, தென்னாட்டில் காங்கிரஸ் பேரியக்கத்தை வளர்க்க வேண்டுமானால், அதைப் பிராமணரல்லாத ஒருவரை வைத்துதான் செய்ய முடியும்; நல்ல பேச்சு வன்மையும் தேச பக்தியும்கொண்ட தலைவராக இருந்தால், நீதிக் கட்சியை முழுவதுமாக ஓரங்கட்டிவிடலாம் என்பதே அது!
இச்சமயத்தில்தான் ராஜாஜிக்கு ஈரோட்டில் ராமசாமி எனும் தலைவரின் சாகசங்களும் அருமை பெருமைகளும் தெரிய வந்தன. ராமசாமியாருக்கு காங்கிரஸ் மீது, எப்போதும் ஒரு அபிமானம் உண்டு. ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதுமே துடித்துப்போன ராமசாமியார், வ.உ.சி. உட்பட 50க்கும் மேற்பட்டவர்களை ரயிலில் அழைத்துச்சென்று அந்த இடத்தில் கண்ணீர் மல்க நின்றிருக்கிறார். தன்னைத் தேடி வரும் காங்கிரஸ் தொண்டர்களுக்குப் பொருளுதவியும் பலமுறை செய்திருக்கிறார். என்றாலும், அப்போதெல்லாம் காங்கிரஸில் அடிப்படை உறுப்பினர் பதவியைக்கூட அவர் ஏற்றிருக்கவில்லை. எனினும் ராஜாஜியின் மீது கொண்டிருந்த நட்பால், அவரது அழைப்புக்கு உடனே ஒப்புக்கொண்டார். தீண்டாமை ஒழிப்பு, மது ஒழிப்பு, விதவைத் திருமணம், கதராடை இயக்கம் என இந்த நான்கு கொள்கைகளையும் கேட்ட மாத்திரத்திலேயே ராமசாமி அவர்களுக்கு காந்தியின் மேல் அளவற்ற மதிப்பும் மரியாதையும் உண்டாகிவிட்டது.
''இனி கண நேரமும் நாம் தாமதிக்கக் கூடாது. இந்தத் தேசத்தை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க, காந்தியின் கரத்தை வலுப்படுத்த இதுவே சரியான தருணம். உங்களது நகராட்சி மன்றப் பதவியை ராஜினாமா செய்யுங்கள். நானும் சேலம் நகர மன்றத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன்'' என ராஜாஜி துரிதப்படுத்த, ராமசாமியார் முழு மனமின்றித் தயங்கினார்.
''நாயக்கரே! உங்களுக்கு என்னதயக்கம் இருந்தாலும் வெளிப்படையாகக் கேளுங்கோ!''
''இல்லை... தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் காங்கிரஸ் கட்சின்னாலே அது உங்க சாதிக்காரங்க கட்சியாதான் இருக்குது.''
''அதனாலதான் உங்களைக் கூப்பிடறேன். நீங்க வந்து அந்த அவப் பேரை மாத்திடுங்கோ!''
''அது போதாது! எனக்கு நீங்க ஓர் உத்தரவாதம் தரணும். கட்சி யிலேயும் உத்தியோகத்திலேயும் உங்க சாதிக்காரங்க இல்லாத மத்த சாதிக்காரங்களுக்கு 50 சதவிகிதம் நீங்க விட்டுக்கொடுத்து டணும். அதுக்குச் சம்மதம்னா சொல்லுங்க, இப்பவே காங்கிரஸ் கட்சியிலே சேர்ந்துடறேன். அதுக் கப்புறம் வெள்ளைக்காரனுக்கு பூட்ஸ் துடைக்கிற ஜஸ்டிஸ்கார னுங்களை உண்டு இல்லைன்னு பண்ணிப்புடலாம்!''
ராஜாஜி தயங்கவும், ''யோசிக்கிறீங்க பாத்தீங்களா! உங்களால அது முடியாது!'' என்றார் ராமசாமி.
''அதில்லை நாயக்கரே! நான் மட்டும் எடுக்கிற முடிவில்லை அது. சரி, கவலையை விடுங்க. அடுத்து நடக்கப்போற திருப்பூர் மாநாட்டுல நானே இதுக்கான தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேத்துறேன். கையைக் கொடுங்கோ, இதைப் போய்ப் பெரிசா எடுத்துக்கிட்டு...'' நண் பர்கள் கைக் குலுக்கிக்கொண் டனர்.
அந்த வாக்குறுதியை நிறை வேற்றுவது அத்தனை எளிதல்ல என்பது ராஜாஜிக்கு நன்றாகத் தெரியும். அப்போதைக்கு வேறு வழி தெரியாமல் வெறுமனே ஒப் புக்குத் தலையை ஆட்டிவிட்டார். பின்னால் பிரச்னை வரும்போது எப்படியாவது பேசி நாயக்கரைச் சமாளித்துவிடலாம் என்பது ஆச்சாரியாரின் கணக்கு.
ஆனால், அது தப்புக் கணக்கு என்பது ஆறு வருடங்களுக்கு பிறகுதான் அவருக்கு உறைத்தது.
தொண்டுள்ளம் என்பது மனிதருள் அரிதாகக் காணப்படும் ஒரு விஷயம். அப்படியே சிலரிடத்தில் அது காணப்பட்டாலும் சோறு, தண்ணீர், தூக்கம் போல் அது அவர்களது வாழ்வின் மற்றொரு காரியம். ஆனால், ராமசாமியாருக்கோ அது ரத்தமும் சதையுமாக பிறக்கும்போதே உடலோடு ஒட்டிப் பிறந்த ஒன்று. அதனால்தான் ராஜாஜி மூலமாக காந்தியைப் பற்றியும் அவரது கொள்கைகளைப் பற்றியும் கேள்விப்பட்ட உடனேயே அவரது உள்ளம் நெருப்பலைகளாகப் பொங்கிப் பிரவகித்தன. காந்தி அவருக்குள் ஒரு கதாநாயகனாக உருவெடுத்தார். அதுவரை தன்னைப் பீடித்து வந்த சிகரெட், புகையிலை போன்ற பழக்கவழக்கங்களுக்கு ஒரே நாளில் நிரந்தர முடிவு கட்டினார்.
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து, ராஜாஜி சேலம் நகர் மன்றத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த அதே நாளில், ராமசாமியாரும் தனது ஈரோடு நகர் மன்றத் தலைவர் பதவியைத் தூக்கி எறிந்தார். அப்போது தீவிரமாக இருந்த காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்துக்குக் கட்டுப்படும் வகையில் கோர்ட் நடவடிக்கை மூலம் தனக்கு வர வேண்டியிருந்த ரூபாய் 50,000 பணத்தையும் நிராகரித்தார். தான் வகித்து வந்த 29 முக்கியப் பதவிகளையும் ஒரே நாளில் துறந்து, கதர் வேட்டி சட்டை, கதர் குல்லா, தோளில் பை எனச் சாதாரணத் தொண்டனாக மாறி ஈரோட்டையே அதிசயிக்கவைத்தார்.
மனைவி நாகம்மையை அழைத்தார்.
வீட்டில், பெட்டியில் அடுக்கடுக்காக இருந்த பட்டுப் புடவைகள், வேட்டி சட்டைகள் அனைத்தையும் சேகரிக்கச் சொன்னார். அப்போது நாடகத்துக்காக ஈரோட்டில் முகாம் போட்டு இருந்த அவ்வை சண்முகம், டி.கே.பகவதி, ஆகியோரை வரவழைத்து, ''இனி இந்தத் துணிகள் உங்களது நாடகத்துக்குப் பயன்படட்டும்'' எனத் துணிகள் அனைத்தையும் கொடுத்ததோடு, ''இனி, இந்த வீட்டில் கதராடை மட்டும்தான் உடுத்த வேண்டும்'' என உத்தரவிட்டார். ஆரம்பத் தயக்கங்களுக்குப் பின் ஒட்டுமொத்த குடும்பமும் ராமசாமியின் கட்டளையை ஏற்றுக்கொண்டு கதராடைக்கு மாறியது.
ஒரு காரியத்தில் இறங்கிவிட்டால், எத்தனை தடை வந்தாலும் அதன் இறுதி எல்லை வரை தொட்டுப் பார்த்துவிடும் சுபாவமும், அதன் பொருட்டு எதனையும் இழக்கும் துணிச்சலும் இயல்பாகக்கொண்டு இருந்த ராமசாமியாரின் மூர்க்கத்தைக் கண்டு காங்கிரஸார் மலைத்து நின்றனர். ஒரு தோளில் ராட்டையும் மற்றொரு தோளில் கதர் துணி மூட்டையுமாக வீதியில் இறங்கி, ஊர் ஊராகக் கதர் வியாபாரம் செய்ய அவர் புறப்பட்டபோது, அதுவரை அவரைச் சுற்றி வந்து வயிறு வளர்த்த கும்பல்கள் அதிர்ந்தன. 'உட்கார்ந்து சாப்பிட்டாலே ஏழு தலைமுறைக்குச் சொத்து இருக்கும்போது, இந்த மனிதனுக்கு இது என்ன வேண்டாத வேலை?' எனப் புலம்பினர். நட்பும் உறவும் எச்சரித்தன. ஆனால், ராமசாமியார் அந்தக் கூச்சல்கள் எதையும் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. மனைவி நாகம்மையையும் தங்கை கண்ணம்மாவையும் அழைத்துக்கொண்டு கதர் பிரசாரத்தில் அவர் ஈடுபட்ட தீவிரத்தைக் கண்டு ராஜாஜியே ஆடிப் போனார்.
பொதுக் கூட்டங்களில் ராமசாமியாரின் பேச்சுக்கு பலத்த கைதட்டல்கள் கேட்டன. இதுநாள் வரை தொண்டைத் தண்ணி வறள தாங்கள் மணிக்கணக்கில் மைக்கில் பேசியும் மசியாத கூட்டம், ராமசாமியாரின் பேச்சில் மகுடிப் பாம்பாய் மயங்கி, கதர் சட்டைக்கு மாறுவது கண்டு ஆச்சர்யப்பட்டனர். இத்தனைக்கும் அவரது பேச்சில் மணிப்பிரவாள மொழி நடை கிடையாது. சாக்ரடீஸ், பிளாட்டோ என மிரளவைக்கும் பிரமாண்டங்கள் துளியும் இல்லை. ஆனால், 'உண்மை' இருந்தது. அந்த ஒன்றுதான் பாமரர்களையும் அவரை நோக்கிச் சுண்டி இழுத்தது. தீண்டாமை, மதுவிலக்கு, கதர் என எதைப் பற்றி அவர் பேசினாலும் பேச்சில் நெருப்புத் துண்டங்கள் தெறித்து விழுந்தன. கேட்போரின் மடமையை அவை அடித்து நொறுக்கி அறிவின் பெரு வெளிச்சத்தையும் தேசப் பற்றையும் ஊட்டி வளர்த்தன. ராமசாமியாரின் இந்த அபாரப் பேச்சுத் திறமையால் தமிழ்நாட்டில் ஆமையாக இருந்த காங்கிரஸ், சிங்கமாக வீறுகொண்டு எழுந்தது. எங்கு கூட்டம் நடத்தினாலும் 'முதலில் ராமசாமியாரைக் கூப்பிடுங்கள். அவர் பேரைச் சொன்னால்தான் கூட்டமே கூடுகிறது' எனுமளவுக்கு அவரது புகழ் தமிழ்நாடு முழுக்கப் பரவியது. ராமசாமியாரின் இந்த அபரிமிதமான வளர்ச்சியில் அவருக்குப் பின்னிருந்து ராஜாஜி முழு முனைப்பாகச் செயல்பட்டார். அதற்குக் காரணமும் இருந்தது.
அப்போதைய அரசியல் சூழலில் தன் முக்கிய எதிரிகளான அன்னிபெசன்ட், தீரர் சத்தியமூர்த்தி, ஆகியோரை வீழ்த்த முடியாமல் ராஜாஜி திணறிக்கொண்டு இருந்தார். இந்தச் சூழலில் தன்னால் கண்டுபிடிக்கப்பட்ட ராமசாமியாரின் வளர்ச்சி அவரை மிகவும் சந்தோஷப்படுத்தியது. இதன் விளைவாகத்தான் திருச்செங்கோட்டில் தன்னால் துவக்கப்பட்ட காந்தி ஆசிரமத்தை ராமசாமியாரின் கைகளால் திறக்கச் செய்தார். தன் அழைப்பின் பேரில் திருச்செங்கோடு ஆசிரமத்துக்கு காந்தி வருகை தந்தபோது, அப்படியே ஈரோட்டில் ராமசாமியாரின் வீட்டுக்கும் அவரை அழைத்துச் சென்றார் ராஜாஜி. அங்கே கள்ளுக் கடை மறியல் குறித்த உரையாடலின்போது ராமசாமியாரிடம் காணப்பட்ட செயல் தீவிரம் காந்தியை ஆச்சர்யப்படுத்தியது. தனது குடும்பத்துப் பெண்களை வீட்டில் பூட்டி சாவியை இடுப்பில் செருகிக்கொண்டு பெரும்பாலான தலைவர்கள் மேடைகளில் வீராவேசம் முழங்கி வந்த காலத்தில், தனது மனைவி நாகம்மையையும் தங்கை கண்ணம்மாவையும் களத்தில் இறக்கிப் போராடவைத்த ராமசாமியாரின் துணிச்சல் காந்தியை மலைக்க வைத்தது.
1921 நவம்பரில் கள்ளுக்கடை மறியல் ஈரோட்டில் பொறி பறந்தது. எதைச் செய்தாலும் முதலில் அதைத் தன்னிடத்திலிருந்து துவங்கும் அருங்குணத்தைப் பெற்றிருந்த ராமசாமியார் சேலம் தாதம் பட்டியில் தனக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை ஒரே இரவில் வெட்டிச் சாய்த்துவிட்டு போராட்டக் களத்தில் குதிக்க, ஆங்கில அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது.
ராமசாமியார் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு மாத சிறைத் தண்டனை. போராட்டம் நின்றுவிட்டது என்ற நினைப்பில் இருந்த போலீஸாருக்கு நாகம்மை, கண்ணம்மாள் என இரண்டு வீர மங்கைகள் இன்னும் களத்திலிருப்பது தெரியாது. அவர்களுக்குப் பின்னால் பெண்கள் அணி அணியாக வீதியில் இறங்கினர். கிட்டத் தட்ட 10,000க்கும் அதிகமானோர் தடையை மீறி தெருவில் இறங்கி அரசாங்கத்துக்கு எதிராகக் கோஷமெழுப்பினர்.
'நிலைமை கட்டுக்கடங்காமல் செல்கிறது' என ஈரோட்டிலிருந்து சென்னைக்குத் தந்தி பறந்தது. அதைக் கண்டு பயந்த அரசு உடனடியாக 144 தடை உத்தரவை நீக்கியது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு கள்ளுக் கடை மறியலைக் கைவிடும்படி ஆங்கில அரசாங்கம் ,காந்தியிடம் கோரிக்கை வைத்தது. 'அது என்னிடத்தில் இல்லை. ஈரோட்டில் இரண்டு பெண்களிடத்தில்தான் இருக்கிறது. அவர்கள்தான் அதனை முடிவு செய்ய வேண்டும்!' என்று காந்தி கூறுமளவுக்கு, நாகம்மை கண்ணம்மாள் இருவரின் போராட்டம் சரித்திரத்தில் இடம் பிடித்தது.
இந்த நேரத்தில் காங்கிரசுக்குள் சாதித் துவேஷங்கள் தீவிரமாக இருந்தன. ஒருபக்கம் மேடையில் தீண்டாமைக்கு எதிராக ஆவேச கோஷங்கள். மறுபக்கம் மாநாடுகளில் பிராமணர்களுக்கெனத் தனிப் பந்தி. உள்ளம் குமுறும் இந்த நடவடிக்கைகள் காரணமாக பலர் புழுங்கித் தவித்தனர். இந்த சமயத்தில்தான் ராமசாமியார் எதிர்பார்த்த திருப்பூர் மாநாடு வந்தது. மாநாட்டில் தனக்கு முன்பு வாக்கு கொடுத்தது போல, பிராமணர் அல்லாதவருக்கு 50 சதவிகிதம் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ராஜாஜி முன்மொழிந்து செயலாக்கிவிடுவார் என ராம சாமியார் நம்பினார்.
ஆனால், சரித்திரச் சக்கரம்?
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து, ராஜாஜி சேலம் நகர் மன்றத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த அதே நாளில், ராமசாமியாரும் தனது ஈரோடு நகர் மன்றத் தலைவர் பதவியைத் தூக்கி எறிந்தார். அப்போது தீவிரமாக இருந்த காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்துக்குக் கட்டுப்படும் வகையில் கோர்ட் நடவடிக்கை மூலம் தனக்கு வர வேண்டியிருந்த ரூபாய் 50,000 பணத்தையும் நிராகரித்தார். தான் வகித்து வந்த 29 முக்கியப் பதவிகளையும் ஒரே நாளில் துறந்து, கதர் வேட்டி சட்டை, கதர் குல்லா, தோளில் பை எனச் சாதாரணத் தொண்டனாக மாறி ஈரோட்டையே அதிசயிக்கவைத்தார்.
மனைவி நாகம்மையை அழைத்தார்.
வீட்டில், பெட்டியில் அடுக்கடுக்காக இருந்த பட்டுப் புடவைகள், வேட்டி சட்டைகள் அனைத்தையும் சேகரிக்கச் சொன்னார். அப்போது நாடகத்துக்காக ஈரோட்டில் முகாம் போட்டு இருந்த அவ்வை சண்முகம், டி.கே.பகவதி, ஆகியோரை வரவழைத்து, ''இனி இந்தத் துணிகள் உங்களது நாடகத்துக்குப் பயன்படட்டும்'' எனத் துணிகள் அனைத்தையும் கொடுத்ததோடு, ''இனி, இந்த வீட்டில் கதராடை மட்டும்தான் உடுத்த வேண்டும்'' என உத்தரவிட்டார். ஆரம்பத் தயக்கங்களுக்குப் பின் ஒட்டுமொத்த குடும்பமும் ராமசாமியின் கட்டளையை ஏற்றுக்கொண்டு கதராடைக்கு மாறியது.
ஒரு காரியத்தில் இறங்கிவிட்டால், எத்தனை தடை வந்தாலும் அதன் இறுதி எல்லை வரை தொட்டுப் பார்த்துவிடும் சுபாவமும், அதன் பொருட்டு எதனையும் இழக்கும் துணிச்சலும் இயல்பாகக்கொண்டு இருந்த ராமசாமியாரின் மூர்க்கத்தைக் கண்டு காங்கிரஸார் மலைத்து நின்றனர். ஒரு தோளில் ராட்டையும் மற்றொரு தோளில் கதர் துணி மூட்டையுமாக வீதியில் இறங்கி, ஊர் ஊராகக் கதர் வியாபாரம் செய்ய அவர் புறப்பட்டபோது, அதுவரை அவரைச் சுற்றி வந்து வயிறு வளர்த்த கும்பல்கள் அதிர்ந்தன. 'உட்கார்ந்து சாப்பிட்டாலே ஏழு தலைமுறைக்குச் சொத்து இருக்கும்போது, இந்த மனிதனுக்கு இது என்ன வேண்டாத வேலை?' எனப் புலம்பினர். நட்பும் உறவும் எச்சரித்தன. ஆனால், ராமசாமியார் அந்தக் கூச்சல்கள் எதையும் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. மனைவி நாகம்மையையும் தங்கை கண்ணம்மாவையும் அழைத்துக்கொண்டு கதர் பிரசாரத்தில் அவர் ஈடுபட்ட தீவிரத்தைக் கண்டு ராஜாஜியே ஆடிப் போனார்.
பொதுக் கூட்டங்களில் ராமசாமியாரின் பேச்சுக்கு பலத்த கைதட்டல்கள் கேட்டன. இதுநாள் வரை தொண்டைத் தண்ணி வறள தாங்கள் மணிக்கணக்கில் மைக்கில் பேசியும் மசியாத கூட்டம், ராமசாமியாரின் பேச்சில் மகுடிப் பாம்பாய் மயங்கி, கதர் சட்டைக்கு மாறுவது கண்டு ஆச்சர்யப்பட்டனர். இத்தனைக்கும் அவரது பேச்சில் மணிப்பிரவாள மொழி நடை கிடையாது. சாக்ரடீஸ், பிளாட்டோ என மிரளவைக்கும் பிரமாண்டங்கள் துளியும் இல்லை. ஆனால், 'உண்மை' இருந்தது. அந்த ஒன்றுதான் பாமரர்களையும் அவரை நோக்கிச் சுண்டி இழுத்தது. தீண்டாமை, மதுவிலக்கு, கதர் என எதைப் பற்றி அவர் பேசினாலும் பேச்சில் நெருப்புத் துண்டங்கள் தெறித்து விழுந்தன. கேட்போரின் மடமையை அவை அடித்து நொறுக்கி அறிவின் பெரு வெளிச்சத்தையும் தேசப் பற்றையும் ஊட்டி வளர்த்தன. ராமசாமியாரின் இந்த அபாரப் பேச்சுத் திறமையால் தமிழ்நாட்டில் ஆமையாக இருந்த காங்கிரஸ், சிங்கமாக வீறுகொண்டு எழுந்தது. எங்கு கூட்டம் நடத்தினாலும் 'முதலில் ராமசாமியாரைக் கூப்பிடுங்கள். அவர் பேரைச் சொன்னால்தான் கூட்டமே கூடுகிறது' எனுமளவுக்கு அவரது புகழ் தமிழ்நாடு முழுக்கப் பரவியது. ராமசாமியாரின் இந்த அபரிமிதமான வளர்ச்சியில் அவருக்குப் பின்னிருந்து ராஜாஜி முழு முனைப்பாகச் செயல்பட்டார். அதற்குக் காரணமும் இருந்தது.
அப்போதைய அரசியல் சூழலில் தன் முக்கிய எதிரிகளான அன்னிபெசன்ட், தீரர் சத்தியமூர்த்தி, ஆகியோரை வீழ்த்த முடியாமல் ராஜாஜி திணறிக்கொண்டு இருந்தார். இந்தச் சூழலில் தன்னால் கண்டுபிடிக்கப்பட்ட ராமசாமியாரின் வளர்ச்சி அவரை மிகவும் சந்தோஷப்படுத்தியது. இதன் விளைவாகத்தான் திருச்செங்கோட்டில் தன்னால் துவக்கப்பட்ட காந்தி ஆசிரமத்தை ராமசாமியாரின் கைகளால் திறக்கச் செய்தார். தன் அழைப்பின் பேரில் திருச்செங்கோடு ஆசிரமத்துக்கு காந்தி வருகை தந்தபோது, அப்படியே ஈரோட்டில் ராமசாமியாரின் வீட்டுக்கும் அவரை அழைத்துச் சென்றார் ராஜாஜி. அங்கே கள்ளுக் கடை மறியல் குறித்த உரையாடலின்போது ராமசாமியாரிடம் காணப்பட்ட செயல் தீவிரம் காந்தியை ஆச்சர்யப்படுத்தியது. தனது குடும்பத்துப் பெண்களை வீட்டில் பூட்டி சாவியை இடுப்பில் செருகிக்கொண்டு பெரும்பாலான தலைவர்கள் மேடைகளில் வீராவேசம் முழங்கி வந்த காலத்தில், தனது மனைவி நாகம்மையையும் தங்கை கண்ணம்மாவையும் களத்தில் இறக்கிப் போராடவைத்த ராமசாமியாரின் துணிச்சல் காந்தியை மலைக்க வைத்தது.
1921 நவம்பரில் கள்ளுக்கடை மறியல் ஈரோட்டில் பொறி பறந்தது. எதைச் செய்தாலும் முதலில் அதைத் தன்னிடத்திலிருந்து துவங்கும் அருங்குணத்தைப் பெற்றிருந்த ராமசாமியார் சேலம் தாதம் பட்டியில் தனக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை ஒரே இரவில் வெட்டிச் சாய்த்துவிட்டு போராட்டக் களத்தில் குதிக்க, ஆங்கில அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது.
ராமசாமியார் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு மாத சிறைத் தண்டனை. போராட்டம் நின்றுவிட்டது என்ற நினைப்பில் இருந்த போலீஸாருக்கு நாகம்மை, கண்ணம்மாள் என இரண்டு வீர மங்கைகள் இன்னும் களத்திலிருப்பது தெரியாது. அவர்களுக்குப் பின்னால் பெண்கள் அணி அணியாக வீதியில் இறங்கினர். கிட்டத் தட்ட 10,000க்கும் அதிகமானோர் தடையை மீறி தெருவில் இறங்கி அரசாங்கத்துக்கு எதிராகக் கோஷமெழுப்பினர்.
'நிலைமை கட்டுக்கடங்காமல் செல்கிறது' என ஈரோட்டிலிருந்து சென்னைக்குத் தந்தி பறந்தது. அதைக் கண்டு பயந்த அரசு உடனடியாக 144 தடை உத்தரவை நீக்கியது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு கள்ளுக் கடை மறியலைக் கைவிடும்படி ஆங்கில அரசாங்கம் ,காந்தியிடம் கோரிக்கை வைத்தது. 'அது என்னிடத்தில் இல்லை. ஈரோட்டில் இரண்டு பெண்களிடத்தில்தான் இருக்கிறது. அவர்கள்தான் அதனை முடிவு செய்ய வேண்டும்!' என்று காந்தி கூறுமளவுக்கு, நாகம்மை கண்ணம்மாள் இருவரின் போராட்டம் சரித்திரத்தில் இடம் பிடித்தது.
இந்த நேரத்தில் காங்கிரசுக்குள் சாதித் துவேஷங்கள் தீவிரமாக இருந்தன. ஒருபக்கம் மேடையில் தீண்டாமைக்கு எதிராக ஆவேச கோஷங்கள். மறுபக்கம் மாநாடுகளில் பிராமணர்களுக்கெனத் தனிப் பந்தி. உள்ளம் குமுறும் இந்த நடவடிக்கைகள் காரணமாக பலர் புழுங்கித் தவித்தனர். இந்த சமயத்தில்தான் ராமசாமியார் எதிர்பார்த்த திருப்பூர் மாநாடு வந்தது. மாநாட்டில் தனக்கு முன்பு வாக்கு கொடுத்தது போல, பிராமணர் அல்லாதவருக்கு 50 சதவிகிதம் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ராஜாஜி முன்மொழிந்து செயலாக்கிவிடுவார் என ராம சாமியார் நம்பினார்.
ஆனால், சரித்திரச் சக்கரம்?
நன்றி விகடன்
No comments:
Post a Comment