தந்தை பெரியார் வரலாறு - 5ன் தொடர்ச்சி...
சில சமயங்களில் இயற்கை, மனிதனைக் காட்டிலும் அட்டகாசமான கவிதைகளை, யாருமே எதிர்பாராத வகையில் எழுதிவிடும். அப்படி அது எழுதிய ஒரு கவிதைதான், வெண்ணிறச் சிங்கமெனத் தாடியும் மீசையுமான கோலத்துடன்கூடிய ஈ.வெ.ராமசாமியாரின் பழுத்த சிந்தனையாளனுக்குரிய தோற்றம்.
ஏற்கெனவே பல் துலக்குவது, குளிப்பது போன்ற அன்றாடக் காரியங்களை எல்லாம் தன் சிந்தனையைத் தடை செய்யும் முக்கிய எதிரிகளாகக் கருதி, கூடுமானவரை அவற்றைத் தவிர்த்துவந்தவர், மலேயா பயணத்தின்போது நேரமின்மை காரணமாக முகம் மழிப்பதையும் முடி வெட்டுவதையும் தேவையற்ற தொந்தரவுகளாகக் கருதி நிறுத்திக்கொண்டார். 'கழுதை அதுபாட்டுக்கு வளரட்டும்.
நேரத்துக்கு நேரம், துட்டுக்கு துட்டுன்னு ரெண்டும் மிச்சம்' என்பது அவர் கணக்கு.
மலேயா பயணம் முடிந்து இந்தியா திரும்பும் பயணத்தில், கப்பல் நாகைத் துறைமுகத்தை வந்தடைந்தது. ராமசாமியார் கப்ப லிலிருந்து வெளிப்பட்டபோது கூடியிருந்த தொண்டர்கள் அதிசயித்தனர். அலை கடலென அவரது தலைக்குப் பின்னால் புரளும் வெண்ணிற முடியும், அருவியென முகத்தில் சரிந்து தொங்கும் தும்பை நிற மீசையும் தாடியும் அவரது தோற்றத்தை முழுவதுமாக மாற்றியிருந்தன. தாங்கள் புகைப்படங்களில் கண்டும் கேட்டும் அறிந்த உலகச் சிந்தனையாளர்களின் முகத் தோற்றத்தைப் போல அவரது முகம் மாறியிருப்பதைக் கண்டு தொண்டர்கள் வியந்தனர்.
மலேயா பயணம் எப்படி அவரது உருவத்தை மாற்றியிருந்ததோ, அது போல அடுத்த வருடமே அவர் மேற்கொண்ட ரஷ்யப் பயணம், அவரது உள்ளத்தை மாற்றியது. அங்கே வீசிய சோஷலிசக் காற்று அவருக்குள்ளிருந்த சமதர்மக் கொடியை மேலும் பட்டொளி வீசிப் படபடக்கவைத்தது. நவம்பர் 8, 1932ல் ரஷ்யாவிலிருந்து கப்பலில் திரும்பிய அவர், தூத்துக்குடி துறைமுகத்தில் கால் வைத்த அன்றே, அங்கு நடந்த வரவேற்புக் கூட்டத்தில், இனி தன்னை அனைவரும் தோழர் என விளிக்கும்படி உத்தரவிட்டார். தனது சகாக்களும் கம்யூனிச சிந்தாந்தத்தில் பற்றுக்கொண்டவர்களுமான தோழர்கள் சிங்காரவேலர், ஜீவானந்தம் ஆகியோரை குடியரசு வார ஏட்டில் தொடர்ந்து பொதுவுடைமைக் கருத்துக்களை எழுதும்படி சொன்னார்.
அக்காலத்தில், ஆங்கில அரசாங்கத்துக்கு கம்யூனிஸ்ட் என யாராவது வாய் தவறிச் சொன்னாலே, கைகால்கள் நடுங்க ஆரம்பித்துவிடும். இந்தச் சூழலில் பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் கர்ப்பப்பையாகக் கருதக்கூடிய கம்யூனிஸ்ட் அறிக்கையை முதன் முதலாக தமிழில் வெளியிட்டார் தோழர் ராமசாமி. அடுத்ததாக அவர்கள் வெளியிட்ட புத்தகத் தின் பெயர், 'நான் ஏன் நாத்திகன் ஆனேன்?'எழுதியவர் பகத்சிங்.
விளைவு, ஒரு நாள் தடதடவென அச்சகத்தினுள் நுழைந்த போலீஸார், ராமசாமியாரின் சகோதரரும் அச்சக உரிமையாளருமான ஈ.வெ.கிருஷ்ணசாமியையும், அந்த நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்த தோழர் ஜீவானந்தத்தையும் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். பின்னர் மன் னிப்புக் கடிதம் தரக்கோரி நிர்பந்திக்கப்பட்டு இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
குண்டு... தன் மனைவி நாகம்மையைத் தோழர் ராமசாமி செல்லமாக அழைப்பது இப்படித்தான். ஈரோட்டில் குடியரசு ஊழியர்களுக்குத் தனது கையாலேயே நாகம்மை மதிய உணவு பரிமாறும்போது, தன் கணவரை அங்கே அனுமதிப்பதில்லை. காரணம், அவர் அங்கே வந்தால், ''ஏய் குண்டு... எதுக்கு இத்தனை காய் போட்டுச் சமைக்கிறே? கொஞ்சம் சிக்கனமா கறி இல்லாம சமைக்க வேண்டியதுதான?'' என்று கணக்கு பார்க்கத் துவங்கிவிடுவார். ஆனாலும், நாகம்மை அதை ஒருபோதும் பொருட்படுத்தாமல் தொண்டர்களுக்கு தன் அன்பையும் சேர்த்துப் பரிமாறுவார். அதனால், நாகம்மை யாரின் திடீர் மரணம் தொண் டர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
ஒருமுறை பொதுக்கூட்டம் ஒன்றில் நாகம்மையார் பேசத் துவங்கியபோது, ராமசாமியார் தன்னைத் 'தோழர் ராமசாமி' என அழைக்கச் சொல்லி வற்புறுத்த, அம்மையாரோ கூச்சப்பட்டு மறுத்தார். ஆனால், ராமசாமியார் விடவில்லை. இறுதியில் தன் மனைவி தன்னை 'தோழர் ராமசாமி அவர்களே' என அழைப் பதைக் கேட்டு நெகிழ்ந்தார்.
இப்படியாக எந்தச் சமரசமும் இல்லாமல் பொதுவாழ்வில் தன்னுடன் இரண்டறக் கலந்துவிட்ட தன் மனைவி இறந்துகிடக்கும் நிலையிலும் சலனம் இல்லாமல் இருந்தார் ராமசாமியார். கையில் தடியை ஊன்றியபடி வாசலில் நின்றுகொண்டு, ஒப்பாரி பாடி அழுதபடி வந்த பெண்களிடம், ''இங்கே பாருங்கள்... உள்ளே போய் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணக்கூடாது. அப்படிப் பண்ணுவதாக அபிப்ராயம் இருந் தால், இப்படியே திரும்பிச் செல்லுங்கள்'' என்றார் திட்ட வட்டமாக. மேலும் அன்று இரவே புறப்பட்டு, திருச்சிக்குச் சென்று மறுநாள் தடை உத்தரவை மீறி ஒரு கிறிஸ்துவத் திருமணத்தை நடத்திவைத்தார்.
தனது தாயாரான சின்னத்தாயம்மாள் இறந்தபோதும் தன் மேல் கவிய வந்த துக்கத்தை ஈயை விரட்டுவது போல விரட்டியடித்தார். கதியற்றுக்கிடக்கும் கோடிக்கணக்கான மனிதர்களின் துயரங்களைத் துடைக்கும் பொறுப்பு தன் முன் இருக்க, தனது சொந்த உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தருவது அயோக்கியத்தனமானது என்பதுதான் அவரது செயல்களுக்குப் பின் னால் இருந்த ஒரே காரணம்.
இப்படியான இரண்டு இழப்பு களுக்கிடையே அவரது வாழ்வில் முக்கியமானதொரு வரவும் நிகழ்ந்தது. திருப்பூரில் நடைபெற்ற செங்குந்தர் மாநாட்டுக்குச் சென்றபோது, முதல்முறையாக ஓர் இளைஞரைப் பார்த்தார். உலகம் அதுவரைகேட்டிராத புதிய தமிழ், அந்தஇளைஞரிடமிருந்து அருவியாகக் கொட்டியது. பார்த்த, கேட்ட கணத்தி லேயே தன் சுயமரியாதை இயக்கப் பயணத்தில் அந்தஇளை ஞரைச் சேர்த்துக்கொள்ள முடிவெடுத்தார். உண்மையில் அப்போது, மேடையில் உரைநிகழ்த்திக்கொண்டு இருந்த அந்த இளைஞனுக்கே... தனது வாழ்க்கை மட்டுமல்ல, தமிழகத்தின் எதிர்கால வரலாறே அந்த மேடையில் தீர்மானிக்கப்படுகிற ரகசியம் தெரியாது. அந்த இளைஞர்... தமிழக மக்களால் பிற்பாடு அன்புடன் 'அறிஞர் அண்ணா' என அழைக் கப்பட்ட சி.என்.அண்ணாதுரை.
அண்ணாவின் வரவு, சுயமரியாதை இயக்கத்துக்குப் புது ரத்தம் பாய்ச்சியது. தகிக்கும் வெப்பக் காட்டாறாக ஒருபுறம் ராமசாமியார் தன் சிந்தனைச் செறிவால் மக்களின் மூடத்தனங் களுக்குச் சாட்டையடி கொடுக்க, இன்னொருபுறம் குளிர்ந்த தென்றலாய் அண்ணா தன் தமிழால் கேட்போர் நெஞ்சங்களைச் சுண்டி இழுத்து வசப்படுத்திவந்தார். அதுவரை சம்ஸ்கிருதக் கலப்பு காரணமாக மக்களின் மனங்களிலே மரத்துக்கிடந்த மொழி உணர்வு, தன் புதிய நீரோட்டத்தை அண்ணாவின் துள்ளு தமிழ்ப் பேச்சில் கண்டுபிடித்தது. தமிழில் புலமையும் ஆற்றலும் மிக்க புதிய இளைஞர் கூட்டம்ஒன்று ஆர்த்தெழுந்து ராம சாமியாரின் சுயமரியாதை இயக்கப் படையில் அணி வகுத்து நின்றது. மொழி காரணமாக, தமிழரிடத்தில் ஒரு புதிய மறுமலர்ச்சி தோன்றியிருந்தது. மறைமலை அடிகளும் திரு.வி.கவும் முன்பே பாதை போட்டுக் கொடுத்திருந்தாலும், இந்தக் காலகட்டத்தில்தான் அது முழுமையான அளவில் படித்த மக்களின் மனதிலே உணர்வாக உருத்திரண்டது.
1937ல் நடைபெற்ற தேர் தலில் வெற்றிபெற்று காங் கிரஸ் சார்பில் முதல் அமைச் சராகப் பதவி ஏற்றதும், முதல் காரியமாகப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடத் திட்டமாக்க ஒரு சட்டம் கொண்டு வந்தார் ராஜாஜி. ராஜாஜியின் இந்தத் திட்டத்துக்குப் பின் உள்ள சதியை உணர்ந்துகொண்ட ராமசாமியார், துடித்து எழுந்தார்.
1938 செப்டம்பரில் சென்னை கடற்கரையில் லட்சக்கணக்கானோர் கூடினர். 'தமிழ்நாடு, தமிழருக்கே!' என இச்சமயத்தில்தான் முதன் முறையாக அறைகூவல் விடுத்தார். தமிழ்நாடு முழுக்க இந்தித் திணிப்புக்கு எதிராகக் கிளர்ச்சிகள் நடத்தப்பட்டன. அரசாங்கம் அடக்குமுறையை ஏவிவிட்டது. பலர் கைது செய்யப்பட்டுச் சிறையில் தள்ளப்பட்டனர். ராமசாமியார் கைது செய்யப்பட்டு இரண்டாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, முதலில் சென்னைச் சிறையிலும் பின்னர் பெல்லாரி சிறைக்குமாக மாற்றப்பட்டார்.
சென்னையில் அதே வருடம் நவம்பர் மாதம் மறைமலை அடிகளின் மகளான நீலாம்பிகை அம்மையார் தலைமையில் நடைபெற்ற தமிழகப் பெண்கள் மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தின்படி தோழர் ராமசாமியாருக்கு ஒரு புதுப் பெயர் சூட்டப்பட்டது.
அன்று அவர்கள் வழங்கிய 'பெரியார்' எனும் சொல், காலத்தில் நிலைத்து நின்று தனக்கெனத் தனிப் புகழைத் தேடிக்கொண்டது!
ஏற்கெனவே பல் துலக்குவது, குளிப்பது போன்ற அன்றாடக் காரியங்களை எல்லாம் தன் சிந்தனையைத் தடை செய்யும் முக்கிய எதிரிகளாகக் கருதி, கூடுமானவரை அவற்றைத் தவிர்த்துவந்தவர், மலேயா பயணத்தின்போது நேரமின்மை காரணமாக முகம் மழிப்பதையும் முடி வெட்டுவதையும் தேவையற்ற தொந்தரவுகளாகக் கருதி நிறுத்திக்கொண்டார். 'கழுதை அதுபாட்டுக்கு வளரட்டும்.
நேரத்துக்கு நேரம், துட்டுக்கு துட்டுன்னு ரெண்டும் மிச்சம்' என்பது அவர் கணக்கு.
மலேயா பயணம் முடிந்து இந்தியா திரும்பும் பயணத்தில், கப்பல் நாகைத் துறைமுகத்தை வந்தடைந்தது. ராமசாமியார் கப்ப லிலிருந்து வெளிப்பட்டபோது கூடியிருந்த தொண்டர்கள் அதிசயித்தனர். அலை கடலென அவரது தலைக்குப் பின்னால் புரளும் வெண்ணிற முடியும், அருவியென முகத்தில் சரிந்து தொங்கும் தும்பை நிற மீசையும் தாடியும் அவரது தோற்றத்தை முழுவதுமாக மாற்றியிருந்தன. தாங்கள் புகைப்படங்களில் கண்டும் கேட்டும் அறிந்த உலகச் சிந்தனையாளர்களின் முகத் தோற்றத்தைப் போல அவரது முகம் மாறியிருப்பதைக் கண்டு தொண்டர்கள் வியந்தனர்.
மலேயா பயணம் எப்படி அவரது உருவத்தை மாற்றியிருந்ததோ, அது போல அடுத்த வருடமே அவர் மேற்கொண்ட ரஷ்யப் பயணம், அவரது உள்ளத்தை மாற்றியது. அங்கே வீசிய சோஷலிசக் காற்று அவருக்குள்ளிருந்த சமதர்மக் கொடியை மேலும் பட்டொளி வீசிப் படபடக்கவைத்தது. நவம்பர் 8, 1932ல் ரஷ்யாவிலிருந்து கப்பலில் திரும்பிய அவர், தூத்துக்குடி துறைமுகத்தில் கால் வைத்த அன்றே, அங்கு நடந்த வரவேற்புக் கூட்டத்தில், இனி தன்னை அனைவரும் தோழர் என விளிக்கும்படி உத்தரவிட்டார். தனது சகாக்களும் கம்யூனிச சிந்தாந்தத்தில் பற்றுக்கொண்டவர்களுமான தோழர்கள் சிங்காரவேலர், ஜீவானந்தம் ஆகியோரை குடியரசு வார ஏட்டில் தொடர்ந்து பொதுவுடைமைக் கருத்துக்களை எழுதும்படி சொன்னார்.
அக்காலத்தில், ஆங்கில அரசாங்கத்துக்கு கம்யூனிஸ்ட் என யாராவது வாய் தவறிச் சொன்னாலே, கைகால்கள் நடுங்க ஆரம்பித்துவிடும். இந்தச் சூழலில் பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் கர்ப்பப்பையாகக் கருதக்கூடிய கம்யூனிஸ்ட் அறிக்கையை முதன் முதலாக தமிழில் வெளியிட்டார் தோழர் ராமசாமி. அடுத்ததாக அவர்கள் வெளியிட்ட புத்தகத் தின் பெயர், 'நான் ஏன் நாத்திகன் ஆனேன்?'எழுதியவர் பகத்சிங்.
விளைவு, ஒரு நாள் தடதடவென அச்சகத்தினுள் நுழைந்த போலீஸார், ராமசாமியாரின் சகோதரரும் அச்சக உரிமையாளருமான ஈ.வெ.கிருஷ்ணசாமியையும், அந்த நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்த தோழர் ஜீவானந்தத்தையும் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். பின்னர் மன் னிப்புக் கடிதம் தரக்கோரி நிர்பந்திக்கப்பட்டு இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
குண்டு... தன் மனைவி நாகம்மையைத் தோழர் ராமசாமி செல்லமாக அழைப்பது இப்படித்தான். ஈரோட்டில் குடியரசு ஊழியர்களுக்குத் தனது கையாலேயே நாகம்மை மதிய உணவு பரிமாறும்போது, தன் கணவரை அங்கே அனுமதிப்பதில்லை. காரணம், அவர் அங்கே வந்தால், ''ஏய் குண்டு... எதுக்கு இத்தனை காய் போட்டுச் சமைக்கிறே? கொஞ்சம் சிக்கனமா கறி இல்லாம சமைக்க வேண்டியதுதான?'' என்று கணக்கு பார்க்கத் துவங்கிவிடுவார். ஆனாலும், நாகம்மை அதை ஒருபோதும் பொருட்படுத்தாமல் தொண்டர்களுக்கு தன் அன்பையும் சேர்த்துப் பரிமாறுவார். அதனால், நாகம்மை யாரின் திடீர் மரணம் தொண் டர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
ஒருமுறை பொதுக்கூட்டம் ஒன்றில் நாகம்மையார் பேசத் துவங்கியபோது, ராமசாமியார் தன்னைத் 'தோழர் ராமசாமி' என அழைக்கச் சொல்லி வற்புறுத்த, அம்மையாரோ கூச்சப்பட்டு மறுத்தார். ஆனால், ராமசாமியார் விடவில்லை. இறுதியில் தன் மனைவி தன்னை 'தோழர் ராமசாமி அவர்களே' என அழைப் பதைக் கேட்டு நெகிழ்ந்தார்.
இப்படியாக எந்தச் சமரசமும் இல்லாமல் பொதுவாழ்வில் தன்னுடன் இரண்டறக் கலந்துவிட்ட தன் மனைவி இறந்துகிடக்கும் நிலையிலும் சலனம் இல்லாமல் இருந்தார் ராமசாமியார். கையில் தடியை ஊன்றியபடி வாசலில் நின்றுகொண்டு, ஒப்பாரி பாடி அழுதபடி வந்த பெண்களிடம், ''இங்கே பாருங்கள்... உள்ளே போய் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணக்கூடாது. அப்படிப் பண்ணுவதாக அபிப்ராயம் இருந் தால், இப்படியே திரும்பிச் செல்லுங்கள்'' என்றார் திட்ட வட்டமாக. மேலும் அன்று இரவே புறப்பட்டு, திருச்சிக்குச் சென்று மறுநாள் தடை உத்தரவை மீறி ஒரு கிறிஸ்துவத் திருமணத்தை நடத்திவைத்தார்.
தனது தாயாரான சின்னத்தாயம்மாள் இறந்தபோதும் தன் மேல் கவிய வந்த துக்கத்தை ஈயை விரட்டுவது போல விரட்டியடித்தார். கதியற்றுக்கிடக்கும் கோடிக்கணக்கான மனிதர்களின் துயரங்களைத் துடைக்கும் பொறுப்பு தன் முன் இருக்க, தனது சொந்த உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தருவது அயோக்கியத்தனமானது என்பதுதான் அவரது செயல்களுக்குப் பின் னால் இருந்த ஒரே காரணம்.
இப்படியான இரண்டு இழப்பு களுக்கிடையே அவரது வாழ்வில் முக்கியமானதொரு வரவும் நிகழ்ந்தது. திருப்பூரில் நடைபெற்ற செங்குந்தர் மாநாட்டுக்குச் சென்றபோது, முதல்முறையாக ஓர் இளைஞரைப் பார்த்தார். உலகம் அதுவரைகேட்டிராத புதிய தமிழ், அந்தஇளைஞரிடமிருந்து அருவியாகக் கொட்டியது. பார்த்த, கேட்ட கணத்தி லேயே தன் சுயமரியாதை இயக்கப் பயணத்தில் அந்தஇளை ஞரைச் சேர்த்துக்கொள்ள முடிவெடுத்தார். உண்மையில் அப்போது, மேடையில் உரைநிகழ்த்திக்கொண்டு இருந்த அந்த இளைஞனுக்கே... தனது வாழ்க்கை மட்டுமல்ல, தமிழகத்தின் எதிர்கால வரலாறே அந்த மேடையில் தீர்மானிக்கப்படுகிற ரகசியம் தெரியாது. அந்த இளைஞர்... தமிழக மக்களால் பிற்பாடு அன்புடன் 'அறிஞர் அண்ணா' என அழைக் கப்பட்ட சி.என்.அண்ணாதுரை.
அண்ணாவின் வரவு, சுயமரியாதை இயக்கத்துக்குப் புது ரத்தம் பாய்ச்சியது. தகிக்கும் வெப்பக் காட்டாறாக ஒருபுறம் ராமசாமியார் தன் சிந்தனைச் செறிவால் மக்களின் மூடத்தனங் களுக்குச் சாட்டையடி கொடுக்க, இன்னொருபுறம் குளிர்ந்த தென்றலாய் அண்ணா தன் தமிழால் கேட்போர் நெஞ்சங்களைச் சுண்டி இழுத்து வசப்படுத்திவந்தார். அதுவரை சம்ஸ்கிருதக் கலப்பு காரணமாக மக்களின் மனங்களிலே மரத்துக்கிடந்த மொழி உணர்வு, தன் புதிய நீரோட்டத்தை அண்ணாவின் துள்ளு தமிழ்ப் பேச்சில் கண்டுபிடித்தது. தமிழில் புலமையும் ஆற்றலும் மிக்க புதிய இளைஞர் கூட்டம்ஒன்று ஆர்த்தெழுந்து ராம சாமியாரின் சுயமரியாதை இயக்கப் படையில் அணி வகுத்து நின்றது. மொழி காரணமாக, தமிழரிடத்தில் ஒரு புதிய மறுமலர்ச்சி தோன்றியிருந்தது. மறைமலை அடிகளும் திரு.வி.கவும் முன்பே பாதை போட்டுக் கொடுத்திருந்தாலும், இந்தக் காலகட்டத்தில்தான் அது முழுமையான அளவில் படித்த மக்களின் மனதிலே உணர்வாக உருத்திரண்டது.
1937ல் நடைபெற்ற தேர் தலில் வெற்றிபெற்று காங் கிரஸ் சார்பில் முதல் அமைச் சராகப் பதவி ஏற்றதும், முதல் காரியமாகப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடத் திட்டமாக்க ஒரு சட்டம் கொண்டு வந்தார் ராஜாஜி. ராஜாஜியின் இந்தத் திட்டத்துக்குப் பின் உள்ள சதியை உணர்ந்துகொண்ட ராமசாமியார், துடித்து எழுந்தார்.
1938 செப்டம்பரில் சென்னை கடற்கரையில் லட்சக்கணக்கானோர் கூடினர். 'தமிழ்நாடு, தமிழருக்கே!' என இச்சமயத்தில்தான் முதன் முறையாக அறைகூவல் விடுத்தார். தமிழ்நாடு முழுக்க இந்தித் திணிப்புக்கு எதிராகக் கிளர்ச்சிகள் நடத்தப்பட்டன. அரசாங்கம் அடக்குமுறையை ஏவிவிட்டது. பலர் கைது செய்யப்பட்டுச் சிறையில் தள்ளப்பட்டனர். ராமசாமியார் கைது செய்யப்பட்டு இரண்டாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, முதலில் சென்னைச் சிறையிலும் பின்னர் பெல்லாரி சிறைக்குமாக மாற்றப்பட்டார்.
சென்னையில் அதே வருடம் நவம்பர் மாதம் மறைமலை அடிகளின் மகளான நீலாம்பிகை அம்மையார் தலைமையில் நடைபெற்ற தமிழகப் பெண்கள் மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தின்படி தோழர் ராமசாமியாருக்கு ஒரு புதுப் பெயர் சூட்டப்பட்டது.
அன்று அவர்கள் வழங்கிய 'பெரியார்' எனும் சொல், காலத்தில் நிலைத்து நின்று தனக்கெனத் தனிப் புகழைத் தேடிக்கொண்டது!
சரித்திரம் கண்ட முதலாவது மொழிப் போர் தமிழகத்தில் அநேக மாறுதல்களை உருவாக்கிவிட்டுக் கடந்தது. இனி பெரியாரால் மட்டுமே தமிழகத்துக்கு விடிவுக்காலம் என்கிற உண்மை நீதிக் கட்சியினருக்குத் தெளிவாகப் புரிந்தது.
விளைவு... 1938 டிசம்பரில், சென்னையில் நடைபெற்ற நீதிக் கட்சியின் 14வது மாநாட்டில் அப்போதைய தலைவரான சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், ''இன்று முதல் நீதிக் கட்சி பெரியார் வசம் முழுமையாக ஒப்படைக் கப்படுகிறது. இக்கட்சிக்கு இனி அவரே தலைவராகச் செயல் படுவார்'' என அறிவிக்க, தொண்டர்கள் எழுப்பிய கரவொலியால் மாநாட்டின் பந்தல் கூரையே படபடத்தது. முன்னமே பெரியாரிடம் இதற்கு ஒப்புதலும் பெற்றிருந்த பன்னீர்செல்வம், பெரியார் கைப்பட எழுதிய எழுச்சிமிகு உரையை வாசித்து, கூட்டத் தினரை உணர்ச்சி அலைகளால் கொந்தளிக்கச் செய்தார். எங்கோ கண்காணாத தொலை வில் சிறையில் இருக்கும் ஒரு தலைவனுக்கு தமிழகத்தில் நடந்த இந்த மகத்தான மரியாதையைக் கேள்விப்பட்ட தேசத் தலைவர்களின் பார்வை பெரியாரை நோக்கித் திரும்பி யது. அப்படிப்பட்ட தலைவர் களில் ஒருவர்... டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். இந்திய அரசியல் சாசனச் சட்டத்தை வடிவமைத்த பெருமைமிகு தலைவர். தென்னாட்டில் பெரியார் என்றால், வடநாட்டில் அம்பேத்கர்.
அதுவரை இந்த இரண்டு சூரியன்களும் நேரில் சந்தித்ததில்லை. அதற்கான வாய்ப்பு, முகம்மது அலி ஜின்னா மூலம் உருவானது. இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை குறித்து விவாதிக்கும் பொருட்டு, ஜின்னா தேநீர் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அழைப்பை ஏற்று, மகாராஷ்டிராவுக்குப் புறப் பட்ட பெரியாரின் ரயில் பயணத் தில், அவருடன் அறிஞர் அண்ணா வும் இருந்தார்.
மகாராஷ்டிராவில் பெரியாரைக் கண்டதும் அம்பேத்கர் கட்டிஅணைத்து வரவேற்றார். காங்கிர ஸின் சனாதன தர்மத்துக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் அணுகுமுறைகளையும் குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட அந்தச் சந்திப்பு, வரலாற் றின் முக்கிய பதிவேடு. அடுத்தடுத்த ஆண்டுகளில், பெரியாரும் அண்ணாவும் தொடர்ந்து வடநாடுகளுக்குப் பயணித்துப் பல அதிர்வுகளை உரு வாக்கிவிட்டுத் தமிழகம் திரும்பினர்.
இங்கே தமிழகத்தில், திராவிடப் புயல் முழுவீச்சில் இருந்தது. கல்வி அறிவு பெற்ற இடைநிலைச் சாதி மக்களின் முதல் தலைமுறைக்கு பெரியாரும் அண்ணாவும் இதய நாயகர்களாக மாறினர். எண்ணற்ற கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேச் சாளர்கள், மேடை நாடகக் கலைஞர் கள், திரைப்பட நடிகர்கள் எனப் பலரும் திராவிட எழுச்சிக்காக மேடைகளில் அணி திரண்டனர். பிற்பாடு திராவிட இலக்கியம் எனத் தனியாக அடையாளப்படுத்தப்படும் அளவுக்கு சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் எழுதப்பட்டன. அதே சமயம், பெரியாரின் மனம் கொண்டி ருந்த வேகத்துக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. அடிக்கடி மருத்துவமனையில் சேர வேண்டிய அவசியம் நேர்ந்தது.
முதுமையில் எல்லா மனித ரும் மீண்டும் குழந்தைகளாகிவிடுகின்றனர். கிட்டத்தட்ட 70 வயதை நெருங்கிவிட்டிருந்த பெரியாரும் இயற்கையின் விதிகளில் இருந்து தப்ப முடிய வில்லை. உற்ற ஒரே துணையாக இருந்த நாகம்மையாரும் இறந்த சூழலில் தன்னைத்தானே நிர்வ கித்துக்கொள்ள முடியாமல் தவித்தார். அவரை அருகிலி ருந்து கவனித்துக்கொள்ளவும், தேவையான நேரத்தில் உணவு மற்றும் மருந்து கொடுத்துப் பராமரிக்கவும் தாயுள்ளம் கொண்ட ஒரு தாதியின் சேவை தேவையாக இருந்தது.
அந்தத் தேவையைத் தக்க சமயத்தில் தீர்த்தார் அண்ணல் தங்கோ. சுயமரியாதைப் படை யின் மற்றுமொரு சிங்கம்.அவரால் அறிமுகப்படுத்தப் பட்ட இளம் பெண்ணுக்கு, அரசியல் ஆர்வமும் தொண் டுள்ளமும் இருந்தது ஆச்சர்ய மான ஒத்திசைவு.
காந்திமதி என்ற அந்தப் பெண், வேலூரில் விறகுத் தொட்டி நடத்திவந்த கனக சபை என்பவரின் மகள். இயக்கப் பற்று காரணமாக, தன் பெயரை அரசியல் மணி எனத் திருத்திக்கொண்டார். எவரிடமும் அத்தனைச் சீக்கிரம் பொறுப்புகளை ஒப்படைக்காத பெரியாரிடமே குறுகிய காலத் தில் நன்மதிப்பைப் பெற்றவர் அரசியல் மணி. கூட்டங்களில் புத்தகம் விற்ற காசை கணக்குச் சுத்தமாகத் திரும்ப ஒப்படைக்கும் அவரது நேர்மை, பெரியாருக்குப் பிடித்திருந்தது. இதன் காரணமாக பெரியாரே கூட்டங்களில் மணி யம்மையார் என மதிப்புடன் அழைக்கத் துவங்க, அந்தப் பெயரே அவருக்கு நிலைத்தது.
அதுவரை தேர்தல் அரசியலில் ஈடுபட்டு வந்த நீதிக் கட்சி, பெரியாரின் தலைமைக்குக் கீழ் வந்த பிறகு, பல மாறுதல்களைச் சந்தித்தது. இந்த மாறுதல்களை நீதிக் கட்சியில் இருந்த சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. பதவி, பணபலம், ஆட்சி, அதிகாரம் எனத் தேர்தல் அரசியலால் பிழைப்பு நடத்திக்கொண்டு இருந்த அந்தக் கூட்டம், பெரியா ருக்கு எதிராகச் சதிகள் செய்யத் துவங்க, அதை முளையிலேயே கிள்ளியெறியும் பொறுப்பை அண்ணாவிடம் ஒப்படைத்தார் பெரியார்.
1944, ஆகஸ்ட் 27 அன்று சேலத்தில் நடந்த மாநாட்டில் அண்ணா வாசித்த தீர்மானம் வரலாற்றை மாற்றி எழுதியது. 'இதுவரை, பணக்காரர்களுக் கெனவே இயங்கி வந்த நீதிக் கட்சி, இனி 'திராவிடர் கழகம்' எனும் பெயரில் பாட்டாளி மக்க ளுக்காகவும் ஏழை எளியவர்க ளுக்காகவும் மட்டுமே பாடுபடும்!' என அண்ணா தனது எழுச்சி உரையை வாசித்தார். பின்னாட் களில் பல நூறு கட்சிகளின் தலைக்காவிரியாக விளங்கி இன்றுவரை எண்ணற்ற தொண்டர் களுடன் பகுத்தறிவுப் பிரசாரத்தில் ஈடுபடும் திராவிடர் கழகம் உதயமானது.
கட்சியின் பெயர் மாற்றப்பட்ட கையோடு, அதுவரையிலான நீதிக் கட்சியின் கொடி குறித்தும் ஆட்சேபங்கள் எழுந்தன. கட்சித் தொண்டரும் பெரியாரின் சகோதரருமான ஈ.வெ.கிருஷ்ண சாமி அவர்களின் மூத்த மகள் மிராண்டா கஜேந்திரன் முதன் முதலாக தராசு சின்னம் பொறித்த நீதிக் கட்சியின் கொடி குறித்துக் கேள்விகளை எழுப்பினார். 'தராசு, நமது சின்னமல்ல! அதில் புரட்சி யும் இல்லை; எந்த எதிர்ப்பும் இல்லை. நமது கொடி, நமது உணர்வைப் பிரதிபலிக்க வேண்டு மானால், முதலில் இந்தத் தராசு கொடிக்கு முடிவுகட்டிவிட்டு, புதிய கொடியை வடிவமைக்க வேண்டும்' என திருச்சி மாநாட்டில் முழங்கினார். புதிய கொடியை உருவாக்கப் பலரும் முனைந்தனர். கறுப்பு சிவப்பு இரண்டு வண்ணங்களில் கொடி அமைக்கப்பட வேண்டும் என்பது ஏகமனதாகத் தீர்மானம் செய்யப்பட்டது. கறுப்பு என்பது தமிழரின் இழிநிலை என்றும், அதை வேர றுக்கும் புரட்சியைச் சிவப்பு நிற வட்டமாகவும் கருத்தில்கொண்டு ஷண்முக வேலாயுதம் என்பவர் கொடியை வடிவமைத்தார்.
ஈரோடு குருகுலத்தில் கூடியிருந்த தொண்டர்களின் மத்தியில் கொடியை வடிவமைத்துப் பார்க்கும் ஆவல் எழுந்தது. கறுப்பு மை கொண்டு கொடியின் சதுர வடிவம் உருவாக்கப்பட, சட்டென அங்கு சிவப்பு மை கிடைக்காமல் தொண்டர்கள் தடுமாறினர். ஆளுக்கொரு பக்க மாகச் சிவப்பு மை தேடிய போது, குடியரசில் உதவியாளராக இருந்த ஒரு தொண்டர் குண்டூசி யால் தனது கட்டை விரலைக் குத்திக்கொண்டார். ரத்தம் துளிர்த்த விரலை கறுப்பு மையின் மேல் தடவ, உதிரத்தால் உருவானது சிவப்பு வட்டம். அந்தத் தொண்டர் கலைஞர் மு.கருணாநிதி!
திருவாரூரில் முரசொலி எனும் சிற்றேட்டைத் துவக்கி, பெரி யாரின் கொள்கைகளை எழுதி வந்த கருணாநிதி, அப்போது அண்ணா நடத்தி வந்த திராவிட நாடு இதழிலும் தொடர்ந்து கதை, கவிதைகளை எழுதி அண்ணாவின் கவனத்தை ஈர்த் தார். தனது இதழில் பணிபுரியும் பொருட்டு, ஈரோட்டுக்கு அண்ணாவால் வரவழைக்கப்பட் டார். பெரியாரின் கைகள் எப்படி அண்ணாவின் தோளில் வீழ்ந்ததோ, அப்படியே அண்ணா வின் கைகளைக் கருணாநிதியின் தோள் தாங்கியது.
திராவிடக் கொள்கை சார்ந்த கவிதைகளாலும், திரைப்பட வசனங்களாலும், அலங்கார மொழிநடையுடன் கூடிய மேடைப் பேச்சாலும் மக்களின் இதயங்களில் தனக்கெனத் தனி இடம் தேடிக்கொண்ட கருணாநிதியின் ஆட்சியில்தான் பெரியாரின் கொள்கைகள் பல சட்டமாக இயற்றப்பட்டன!
விளைவு... 1938 டிசம்பரில், சென்னையில் நடைபெற்ற நீதிக் கட்சியின் 14வது மாநாட்டில் அப்போதைய தலைவரான சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், ''இன்று முதல் நீதிக் கட்சி பெரியார் வசம் முழுமையாக ஒப்படைக் கப்படுகிறது. இக்கட்சிக்கு இனி அவரே தலைவராகச் செயல் படுவார்'' என அறிவிக்க, தொண்டர்கள் எழுப்பிய கரவொலியால் மாநாட்டின் பந்தல் கூரையே படபடத்தது. முன்னமே பெரியாரிடம் இதற்கு ஒப்புதலும் பெற்றிருந்த பன்னீர்செல்வம், பெரியார் கைப்பட எழுதிய எழுச்சிமிகு உரையை வாசித்து, கூட்டத் தினரை உணர்ச்சி அலைகளால் கொந்தளிக்கச் செய்தார். எங்கோ கண்காணாத தொலை வில் சிறையில் இருக்கும் ஒரு தலைவனுக்கு தமிழகத்தில் நடந்த இந்த மகத்தான மரியாதையைக் கேள்விப்பட்ட தேசத் தலைவர்களின் பார்வை பெரியாரை நோக்கித் திரும்பி யது. அப்படிப்பட்ட தலைவர் களில் ஒருவர்... டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். இந்திய அரசியல் சாசனச் சட்டத்தை வடிவமைத்த பெருமைமிகு தலைவர். தென்னாட்டில் பெரியார் என்றால், வடநாட்டில் அம்பேத்கர்.
அதுவரை இந்த இரண்டு சூரியன்களும் நேரில் சந்தித்ததில்லை. அதற்கான வாய்ப்பு, முகம்மது அலி ஜின்னா மூலம் உருவானது. இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை குறித்து விவாதிக்கும் பொருட்டு, ஜின்னா தேநீர் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அழைப்பை ஏற்று, மகாராஷ்டிராவுக்குப் புறப் பட்ட பெரியாரின் ரயில் பயணத் தில், அவருடன் அறிஞர் அண்ணா வும் இருந்தார்.
மகாராஷ்டிராவில் பெரியாரைக் கண்டதும் அம்பேத்கர் கட்டிஅணைத்து வரவேற்றார். காங்கிர ஸின் சனாதன தர்மத்துக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் அணுகுமுறைகளையும் குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட அந்தச் சந்திப்பு, வரலாற் றின் முக்கிய பதிவேடு. அடுத்தடுத்த ஆண்டுகளில், பெரியாரும் அண்ணாவும் தொடர்ந்து வடநாடுகளுக்குப் பயணித்துப் பல அதிர்வுகளை உரு வாக்கிவிட்டுத் தமிழகம் திரும்பினர்.
இங்கே தமிழகத்தில், திராவிடப் புயல் முழுவீச்சில் இருந்தது. கல்வி அறிவு பெற்ற இடைநிலைச் சாதி மக்களின் முதல் தலைமுறைக்கு பெரியாரும் அண்ணாவும் இதய நாயகர்களாக மாறினர். எண்ணற்ற கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேச் சாளர்கள், மேடை நாடகக் கலைஞர் கள், திரைப்பட நடிகர்கள் எனப் பலரும் திராவிட எழுச்சிக்காக மேடைகளில் அணி திரண்டனர். பிற்பாடு திராவிட இலக்கியம் எனத் தனியாக அடையாளப்படுத்தப்படும் அளவுக்கு சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் எழுதப்பட்டன. அதே சமயம், பெரியாரின் மனம் கொண்டி ருந்த வேகத்துக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. அடிக்கடி மருத்துவமனையில் சேர வேண்டிய அவசியம் நேர்ந்தது.
முதுமையில் எல்லா மனித ரும் மீண்டும் குழந்தைகளாகிவிடுகின்றனர். கிட்டத்தட்ட 70 வயதை நெருங்கிவிட்டிருந்த பெரியாரும் இயற்கையின் விதிகளில் இருந்து தப்ப முடிய வில்லை. உற்ற ஒரே துணையாக இருந்த நாகம்மையாரும் இறந்த சூழலில் தன்னைத்தானே நிர்வ கித்துக்கொள்ள முடியாமல் தவித்தார். அவரை அருகிலி ருந்து கவனித்துக்கொள்ளவும், தேவையான நேரத்தில் உணவு மற்றும் மருந்து கொடுத்துப் பராமரிக்கவும் தாயுள்ளம் கொண்ட ஒரு தாதியின் சேவை தேவையாக இருந்தது.
அந்தத் தேவையைத் தக்க சமயத்தில் தீர்த்தார் அண்ணல் தங்கோ. சுயமரியாதைப் படை யின் மற்றுமொரு சிங்கம்.அவரால் அறிமுகப்படுத்தப் பட்ட இளம் பெண்ணுக்கு, அரசியல் ஆர்வமும் தொண் டுள்ளமும் இருந்தது ஆச்சர்ய மான ஒத்திசைவு.
காந்திமதி என்ற அந்தப் பெண், வேலூரில் விறகுத் தொட்டி நடத்திவந்த கனக சபை என்பவரின் மகள். இயக்கப் பற்று காரணமாக, தன் பெயரை அரசியல் மணி எனத் திருத்திக்கொண்டார். எவரிடமும் அத்தனைச் சீக்கிரம் பொறுப்புகளை ஒப்படைக்காத பெரியாரிடமே குறுகிய காலத் தில் நன்மதிப்பைப் பெற்றவர் அரசியல் மணி. கூட்டங்களில் புத்தகம் விற்ற காசை கணக்குச் சுத்தமாகத் திரும்ப ஒப்படைக்கும் அவரது நேர்மை, பெரியாருக்குப் பிடித்திருந்தது. இதன் காரணமாக பெரியாரே கூட்டங்களில் மணி யம்மையார் என மதிப்புடன் அழைக்கத் துவங்க, அந்தப் பெயரே அவருக்கு நிலைத்தது.
அதுவரை தேர்தல் அரசியலில் ஈடுபட்டு வந்த நீதிக் கட்சி, பெரியாரின் தலைமைக்குக் கீழ் வந்த பிறகு, பல மாறுதல்களைச் சந்தித்தது. இந்த மாறுதல்களை நீதிக் கட்சியில் இருந்த சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. பதவி, பணபலம், ஆட்சி, அதிகாரம் எனத் தேர்தல் அரசியலால் பிழைப்பு நடத்திக்கொண்டு இருந்த அந்தக் கூட்டம், பெரியா ருக்கு எதிராகச் சதிகள் செய்யத் துவங்க, அதை முளையிலேயே கிள்ளியெறியும் பொறுப்பை அண்ணாவிடம் ஒப்படைத்தார் பெரியார்.
1944, ஆகஸ்ட் 27 அன்று சேலத்தில் நடந்த மாநாட்டில் அண்ணா வாசித்த தீர்மானம் வரலாற்றை மாற்றி எழுதியது. 'இதுவரை, பணக்காரர்களுக் கெனவே இயங்கி வந்த நீதிக் கட்சி, இனி 'திராவிடர் கழகம்' எனும் பெயரில் பாட்டாளி மக்க ளுக்காகவும் ஏழை எளியவர்க ளுக்காகவும் மட்டுமே பாடுபடும்!' என அண்ணா தனது எழுச்சி உரையை வாசித்தார். பின்னாட் களில் பல நூறு கட்சிகளின் தலைக்காவிரியாக விளங்கி இன்றுவரை எண்ணற்ற தொண்டர் களுடன் பகுத்தறிவுப் பிரசாரத்தில் ஈடுபடும் திராவிடர் கழகம் உதயமானது.
கட்சியின் பெயர் மாற்றப்பட்ட கையோடு, அதுவரையிலான நீதிக் கட்சியின் கொடி குறித்தும் ஆட்சேபங்கள் எழுந்தன. கட்சித் தொண்டரும் பெரியாரின் சகோதரருமான ஈ.வெ.கிருஷ்ண சாமி அவர்களின் மூத்த மகள் மிராண்டா கஜேந்திரன் முதன் முதலாக தராசு சின்னம் பொறித்த நீதிக் கட்சியின் கொடி குறித்துக் கேள்விகளை எழுப்பினார். 'தராசு, நமது சின்னமல்ல! அதில் புரட்சி யும் இல்லை; எந்த எதிர்ப்பும் இல்லை. நமது கொடி, நமது உணர்வைப் பிரதிபலிக்க வேண்டு மானால், முதலில் இந்தத் தராசு கொடிக்கு முடிவுகட்டிவிட்டு, புதிய கொடியை வடிவமைக்க வேண்டும்' என திருச்சி மாநாட்டில் முழங்கினார். புதிய கொடியை உருவாக்கப் பலரும் முனைந்தனர். கறுப்பு சிவப்பு இரண்டு வண்ணங்களில் கொடி அமைக்கப்பட வேண்டும் என்பது ஏகமனதாகத் தீர்மானம் செய்யப்பட்டது. கறுப்பு என்பது தமிழரின் இழிநிலை என்றும், அதை வேர றுக்கும் புரட்சியைச் சிவப்பு நிற வட்டமாகவும் கருத்தில்கொண்டு ஷண்முக வேலாயுதம் என்பவர் கொடியை வடிவமைத்தார்.
ஈரோடு குருகுலத்தில் கூடியிருந்த தொண்டர்களின் மத்தியில் கொடியை வடிவமைத்துப் பார்க்கும் ஆவல் எழுந்தது. கறுப்பு மை கொண்டு கொடியின் சதுர வடிவம் உருவாக்கப்பட, சட்டென அங்கு சிவப்பு மை கிடைக்காமல் தொண்டர்கள் தடுமாறினர். ஆளுக்கொரு பக்க மாகச் சிவப்பு மை தேடிய போது, குடியரசில் உதவியாளராக இருந்த ஒரு தொண்டர் குண்டூசி யால் தனது கட்டை விரலைக் குத்திக்கொண்டார். ரத்தம் துளிர்த்த விரலை கறுப்பு மையின் மேல் தடவ, உதிரத்தால் உருவானது சிவப்பு வட்டம். அந்தத் தொண்டர் கலைஞர் மு.கருணாநிதி!
திருவாரூரில் முரசொலி எனும் சிற்றேட்டைத் துவக்கி, பெரி யாரின் கொள்கைகளை எழுதி வந்த கருணாநிதி, அப்போது அண்ணா நடத்தி வந்த திராவிட நாடு இதழிலும் தொடர்ந்து கதை, கவிதைகளை எழுதி அண்ணாவின் கவனத்தை ஈர்த் தார். தனது இதழில் பணிபுரியும் பொருட்டு, ஈரோட்டுக்கு அண்ணாவால் வரவழைக்கப்பட் டார். பெரியாரின் கைகள் எப்படி அண்ணாவின் தோளில் வீழ்ந்ததோ, அப்படியே அண்ணா வின் கைகளைக் கருணாநிதியின் தோள் தாங்கியது.
திராவிடக் கொள்கை சார்ந்த கவிதைகளாலும், திரைப்பட வசனங்களாலும், அலங்கார மொழிநடையுடன் கூடிய மேடைப் பேச்சாலும் மக்களின் இதயங்களில் தனக்கெனத் தனி இடம் தேடிக்கொண்ட கருணாநிதியின் ஆட்சியில்தான் பெரியாரின் கொள்கைகள் பல சட்டமாக இயற்றப்பட்டன!
நன்றி விகடன்
No comments:
Post a Comment